×

பெரம்பலூர் சிப்காட் தொழில்பூங்காவில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு!

பெரம்பலூர்: பெரம்பலூரில் நேற்று மாலை நடந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் இரவு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையின் தரம் பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து அருகேயுள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற அமைச்சர் உதயநிதி, உடனடியாக கேரம்போர்டு, கிரிக்கெட், செஸ் உள்ளிட்டவற்றை உடனே வரவழைத்து வழங்கினார். இந்த நடவடிக்கை மாணவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரவு பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள ஓட்டலில் தங்கினார்.

இன்று காலை பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் மற்றும் தைவான் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களால் தொடங்கியுள்ள ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் சி.வெ.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சிவசங்கர், ஆ.ராசா எம்பி, தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் தரேஷ் அஹமது, கலெக்டர் கற்பகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

The post பெரம்பலூர் சிப்காட் தொழில்பூங்காவில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Perambalur Chipkot Industrial Park ,Perambalur ,Udhayanidhi ,Ariyalur district ,DMK ,Perambalur Chipkat Industrial Park ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...